Tuesday, January 17, 2012

Why this kolaveri di

கொல வெறிப்பாடலின் ‘கிக்’ ஏறிக்கொண்டே போகிறது. தனுஷ்கூட அதிர்ந்துபோகும் அளவுக்கு அவரையே மிரட்டிக்கொண்டிருக்கிறது அவரால் உருவான பாடலின் அதிர்வுகள் ..
‘யுட்யூ’பி ன் கோல்ட் விருது, டைம் இதழின் கவுரவம், பிரதமருடன் விருந்து சாப்பிடும் பெருமை என அடுத்தடுத்து தனுஷ் எழுதிப் பாடி பெரும் பாப்புலாரிட்டியைச் சம்பாதித்துள்ள ஒய் திஸ் கொல வெறிடி..-யை சிறந்த பாடலாக பிரபல சிஎன்என் தொலைக்காட்சி தேர்வு செய்துள்ளது.
2011-ன் டொப் பாடல்’ என்ற பாராட்டையும் இந்தப் பாடல் பெற்றுள்ளது. இதற்கிடையே, பிரதமரின் விருந்தில் பங்கேற்ற தனுஷ், நேற்று சென்னை திரும்பினார். இந்த ஆண்டு தனது புத்தாண்டு தினத்தை பெற்றோர் மற்றும் மாமனார் ரஜினியின் ஆசியுடன் தொடங்குவேன் என்று கூறிய அவர், இன்றைய தினம் தன் மனைவி ஐஸ்வர்யாவின் பிறந்த நாளையும் விமரிசையாக கொண்டாடப் போவதாக அறிவித்திருந்தார்…

No comments:

Post a Comment