Tuesday, January 24, 2012

கம்ப்யூட்டரின் அடிப்படை விசயங்களை தெரிந்துகொள்ளுங்கள்....!



நாம் அன்றாடம் கம்ப்யூட்டரை பயன்படுத்திக்கொண்டிருப்போம். ஆனால் நமக்கு இன்னமும் கம்ப்யூட்டரின் அடிப்படை விசயங்களில் சில சந்தேகங்கள் இருக்கத்தான் செய்யும். அதனை மற்றவரிடம் போய் கேட்பது நமக்கே கஷ்டமான விசயம். ஏனென்றால் ஒருவரிடம் இதை போய் கேட்டால் இவ்வளவு நாளாக நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்கள் உங்களுக்கு இது கூட தெரியாத என அவர் கேட்டுவிடுவாரே என்றுதான்.....

சரி... இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்...

கம்ப்யூட்டரின் அடிப்படை விசயங்கள் உங்களுக்கு தெரிந்தவை தெரியாதவை எதுவானாலும் சரி இந்த பதிவின் மூலம் நாம் பகிர்ந்துகொள்வோம்..

1



ஒருவர் உங்கள் கம்ப்யூட்டரின் மாடல் நம்பர் என்ன என்று கேட்டால் நீங்கள் உடனே கம்ப்யூட்டருக்கு சென்று CPU ஐ சுற்றி சுற்றி பார்த்துவிட்டு மாடல் நம்பர் எங்கே இருக்கிறது என தெரியாமல் யோசிக்க வேண்டாம்

உங்கள் கம்ப்யூட்டரில் Start Menu ஐ கிளிக் செய்து Run என்ற இடத்தில் msinfo32.exe என டைப் செய்து எண்டரை அழுத்துங்கள். உங்கள் கம்ப்யூட்டர் பற்றிய விபரங்கள் மாடல், கம்ப்யூட்டர் உருவாக்கிய நாள் அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்.....


2

உங்கள் கம்ப்யூட்டரில் 1GB ராம் பொருத்தப்பட்டுள்ளது என வைத்துக் கொள்ளுங்கள். அதோடு இன்னொரு 1GB ராம் பொருத்த வேண்டும் என உங்களுக்கு ஒரு ஆசை உள்ளது. உடனே கம்ப்யூட்டர் கடைக்கு சென்று நீங்கள் என் கம்ப்யூட்டருக்கு 1GB ராம் பொருத்த வேண்டும் அதன் விலை என்ன என்று கேட்பீர்கள். அவர் உங்களிடம் ராம் SDRAM, DDR1, DDR2, DDR3 இதில் எந்த வகை ராம் உங்களுக்கு வேண்டும் என கேட்பார். அதை உங்கள் கம்ப்யூட்டரில் எப்படி பார்ப்பது என்று உங்களுக்கு இதுவரை தெரியாமல் இருக்கிறதா....

இண்டெர் நெட்டில் இலவசமாக உள்ள இந்த CPUZ என்ற மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யுங்கள்.


இன்ஸ்டால் செய்த பிறகு இதனை ஓப்பன் செய்து Memory என்ற தலைப்பை கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டரின் உள்ளே பொருத்தப்பட்டுள்ளது எந்த வகை ராம் என தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.


3





உங்களிடம் இரண்டு போட்டோ இருக்கிறது. அது இரண்டையும் ஒரே பேப்பரில் பிரிண்ட் எடுத்தால் பேப்பர் மிச்சம் ஆகும். ஆனால் அது எப்படி என்று நமக்கு தெரியவில்லையே என்று கவலையா ? அல்லது அப்படி எடுப்பதற்கு தனியாக ஒரு மென்பொருள் வேண்டுமே என்று இது நாள் வரை நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா ?

உங்கள் போட்டோவை ஓப்பன் செய்வதற்கு முன்பாக அந்த போட்டோ ஐக்கானில் உங்கள் மவுசை வைத்து வலது பக்கம் கிளிக் செய்து வரும் தட்டில் Windows Picture and Fax Viewer என்பதை கிளிக் செய்யுங்கள். உடனே உங்கள் போட்டோ Picture and Fax Viewer மூலம் ஓப்பன் ஆகும். அந்த போட்டோவின் கீழ் Print என்று ஒரு ஐக்கான் இருப்பதை நீங்கள் பார்கலாம். அதனை நீங்கள் கிளிக் செய்யுங்கள்.

 

அடுத்து வரும் தட்டில் உங்களுக்கு தேவையான இரண்டு போட்டோவை டிக் செய்துகொள்ளுங்கள்.


அடுத்து Next ஐ அழுத்துங்கள்.



அடுத்தும் Next  ஐ அழுத்துங்கள்.


அடுத்து வரும் இந்த தட்டில் இடது பக்கம் உள்ள Available Layout என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான இரண்டு போட்டோ உள்ள Layout ஐ தேர்ந்தெடுங்கள்.



அடுத்து Next  .......... Next ஐ அழுத்தினால் போதும் உடனே உங்களுக்கு இரண்டு போட்டோ ஒரே பேப்பரில் பிரிண்ட் ஆகி வெளியே வரும். இதே முறையில் நான்கு போட்டோ மற்றும் ஒன்பது போட்டோ ஒரே பக்கத்தில் பிரிண்ட் எடுக்கும் Layout ஐயும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.






உங்கள் கீபோர்டில் ஏற்படும் திடீர் பிரச்சனையின் காரணமாக சில பட்டன்கள் வேலை செய்யாமல் போகலாம்.  அதனால் ஒரு சில எழுத்துக்களை மட்டும் நாம் கீ போர்டு மூலம் டைப் செய்ய முடியாமல்  சிரமப்படுவோம். அப்படிப்பட்ட  நேரத்தில் கம்ப்யூட்டரில்  ஸ்கிரீன்  கீபோர்டு இருந்தால்  வசதியாக  இருக்குமே என நாம்  நினைப்போம். அதற்கு தனியாக ஏதாவது ஒரு  மென்பொருள் இருக்கிறதா என இணைய  தளத்தில்  தேடிக்கொண்டிருப்போம்.  ஆனால்  விண்டோஸ்  புரோகிராமில் எப்பொழுதும் ஒரு  ஆன் ஸ்கிரீன்  கீபோர்டு உள்ளது என்று  நான் சொன்னால் உங்களுக்கு எவ்வளவு  சந்தோசமாக இருக்கும். ஆம்.  நீங்கள் Start மெனுவை  ஓப்பன் செய்து Run என்ற  பட்டனை  கிளிக்  செய்து அதில்  OSK  என டைப் செய்து எண்டரை அழுத்துங்கள். உடனே உங்களுக்கு ஒரு ஆன் ஸ்கிரீன்  கீபோர்டு  கிடைத்துவிடும். அதன் மூலம்  நீங்கள்  எளிதாக அவசர தேவைகளுக்கு டைப் செய்துகொள்ளலாம்.


5







உங்கள் கம்ப்யூட்டர் திரையை காப்பி எடுக்க தனியாக ஒரு மென்பொருள்தான் வேண்டும் என்று நீங்கள் இதுநாள் வரை நினைத்திருந்தால் அது முற்றிலும் தவறு.  ஏனென்றால்  உங்கள் கம்ப்யூட்டர் திரையை நீங்கள் நினைத்த நேரத்தில் காப்பி எழுத்து அதை சேமித்துக்கொள்ள உங்கள் கீ போர்டில் Prt scr என்ற ஒரு பட்டன் உள்ளது.

இந்த பட்டனை அழுத்தி  நீங்கள்  கம்ப்யூட்டர்  திரையை  காப்பி எடுத்ததும்  Clipboard Copy   அதாவது  கம்ப்யூட்டர்  மெமரியில்  காப்பி  ஆகிக்கொள்ளும்.  பிறகு நீங்கள் Paint Brush அல்லது Word, Excel  போன்ற  ஏதாவது  மென் பொருளை  ஓப்பன்  செய்துகொண்டு  அதில்  Past  பட்டனை அழுத்தினால்  நீங்கள் காப்பி செய்த ஸ்கிரீன் அங்கு வந்துவிடும்.

தில்ஷான் ராஜினாமா; புதிய தலைவர் மஹேல....!



இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திலகரட்ன தில்ஷான் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த உலகக்கிண்ணத் தொடரின் பின்னர் குமார் சங்கக்கார ராஜினாமா செய்ததையடுத்து திலகரட்ன தில்ஷான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். 
எனினும்  இலங்கை அணி அண்மைக்காலத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்க அணிகளுடன் தோல்விகளைத் தழுவியதையடுத்து இலங்கை கிரிக்கெட் துறை முற்றாக மறுசீரமைக்ப்படவுள்ளதாக செய்திகள்வெளியாகியிருந்தன.
அண்மையில் கிரிக்கெட் தேர்வுக்குழுவுக்கு புதிய அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அணித்தலைவர் பதவியிலிருந்து தில்ஷான் ராஜினாமா செய்ததையடுத்து மஹேல ஜயவர்தன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏஞ்சலோ மத்திவ்ஸ் தொடர்ந்தும் உபதலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
டெஸ்ட், ஒருநாள் சர்வதேச போட்டிகள், 20 ஓவர் போட்டிகள் ஆகிய 3 வகையான போட்டிகளுக்கும் மஹேல ஜயவர்தன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
34 வயதான மஹேல ஜயவர்தன,  ஏற்கெனவே 2006 முதல் 2009 ஆம் ஆண்டுவரை இலங்கை அணிக்குத் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.  
அவர் இலங்கை அணியை சிறந்த முறையில் வழிநடத்துவார் என எதிர்பக்கபடுகிறது.
 

Monday, January 23, 2012

கூகுள் தேடுபொறியில் இனி எல்லாமே கிடைக்கும் : புதிய வசதி அறிமுகம்



கடந்த வருடம் பேஸ்புக் சேவையை போன்று, கூகுள் பிளஸை அறிமுகப்படுத்திய கூகுல் நிறுவனம், தற்போது Search, Plus your World எனும் இச்சேவையை விரிவாக்க தொடங்கியுள்ளது.

நீங்கள் கூகுள் பிளஸில் சேகரிக்கும் உங்களது புகைப்படங்கள், வீடியோக்கள், செய்திகள், தரவுகள் என்பவற்றை நீங்கள் விரும்பும் பட்சத்தில் கூகுள் தளத்தின் பிரதான தேடுபொறியுடன் இனி இணைத்து கொள்ள முடியும். இதன் மூலம், உங்களை பற்றி அறியாத மூன்றாவது நபர் ஒருவர் உங்களுடன் நண்பர் ஆகமலே நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் பொது விஷயமொன்றை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது என்கிறது கூகுள்.

 http://www.youtube.com/watch?v=8Z9TTBxarbs&feature=player_embedded

YouTube ல் திரைப்படங்களை பார்த்து மகிழலாம்...!


காணொளி  இயங்குதளமான Youtube 'ல் நாம் எடுத்த விடியோவை  அப்லோட் செய்து எமது நண்பர்களோடும், உறவினர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம். இப்பொழுது  இந்த தளத்தில்  400க்கும் அதிகமான திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஆரம்பிக்கப் பட்டிருந்தாலும் , தற்போதைய புதிய ஒப்பந்தங்களுக்கு அமைய பல திரைப்படங்களை YouTube ல் ஓட்டும் உரிமையினை கூகிள் நிறுவனம் பெற்றுள்ளது. 

இந்த லின்க்குகளை சொடுக்குவதன் மூலம் உங்களுக்கு விருப்பமான திரைப்படங்களை பார்த்து மகிழலாம்.


Wednesday, January 18, 2012

இலங்கை அணிக்குள் இரண்டு பிரிவுகளா...?

தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ள இலங்கை கிரிக்கட் அணி இரு கோஷ்டிகளாக பிரிந்து செயற்படுவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அணியின் மூன்று சிரேஷ்ட வீர்ர்களின் தலைமையில் சில வீரர்களும் அணித் தலைவர் தலைமையில் இன்னும் சில வீர்ர்களுமாகச் சேர்ந்து இரு அணிகளாக பிரிந்து செயற்படுகின்றனர் என்றும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
சிரேஷ்ட வீர்ர்களின் தலைமையிலான அணியே பலம் பொருந்திக் காணப்படுகிறது என்றும் அந்த்த் தகவல்கள் மேலும் கூறுகின்றன.
இதேவேளை, தென்னாபிரிக்க கிரிக்கட் போட்டிகள் முடிந்து ஒரு வாரகாலத்துக்குள் அனைத்து வீர்ர்களையும் நாடு திரும்புவற்கு ஏற்பாடு செய்யுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே கிரிக்கட் சபையின் தலைவர் உபாலி தர்மதாசவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tuesday, January 17, 2012

மாற்றம் காணும் பேஸ்புக்...!

கடந்த இரண்டு ஆண்டுகளில் பேஸ்புக் தளத்தில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தனி நபர்களின் பேஸ்புக் பக்கங்களில் விளம்பரதாரர்கள் விளம்பரம் செய்வதிலிருந்து தொடங்கி பல்வேறு விதமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறித்த மாற்றங்கள் செய்யப்படும் போது விளக்கங்களோ, எச்சரிக்கைகள் எதனையும் பேஸ்புக் மேற்கொள்வதில்லை.
கடந்த 18 மாதங்களில் பேஸ்புக் தனது தனியுரிமைக் கொள்கைகளை 8 முறை மாற்றி அமைத்துள்ளது.
நீங்கள் தற்போது எங்கு உள்ளீர்கள் போன்ற தனிப்பட்ட விடயங்களையும் சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் மாற்றப்படுவதை பேஸ்புக் பாவனையாளர்கள் விரும்பவில்லை.
எங்களது பேஸ்புக் கணக்கிலிருந்து எங்களுக்குத் தெரியாதவர்கள் தகவல் திருடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று 60 வீதமான பேஸ்புக் பாவனையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக்கின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை மாற்றக் கூடாது என்று 19 வீதமான மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


கடந்த 2 வருடங்களில் மாற்றம் காணும் பேஸ்புக்கின் முக்கிய கட்டங்கள் வருமாறு…
March 2010: Facebook upsets privacy watchdogs by offering ‘pre-approved’ third party access to any profile data.
May 2010: Controls and settings changed.
August 2010: Facebook Places launches – tells friends where you are.
October 2010: Privacy settings change to create ‘Groups’.
October 2010: ‘See friendship’ button offers a ‘history’ of your friendship.
January 2011: Changes permissions so third-party apps can access public address and phone numbers.
June 2011: Automatic tagging is enabled.
August 2011: Settings menu changes.

Why this kolaveri di

கொல வெறிப்பாடலின் ‘கிக்’ ஏறிக்கொண்டே போகிறது. தனுஷ்கூட அதிர்ந்துபோகும் அளவுக்கு அவரையே மிரட்டிக்கொண்டிருக்கிறது அவரால் உருவான பாடலின் அதிர்வுகள் ..
‘யுட்யூ’பி ன் கோல்ட் விருது, டைம் இதழின் கவுரவம், பிரதமருடன் விருந்து சாப்பிடும் பெருமை என அடுத்தடுத்து தனுஷ் எழுதிப் பாடி பெரும் பாப்புலாரிட்டியைச் சம்பாதித்துள்ள ஒய் திஸ் கொல வெறிடி..-யை சிறந்த பாடலாக பிரபல சிஎன்என் தொலைக்காட்சி தேர்வு செய்துள்ளது.
2011-ன் டொப் பாடல்’ என்ற பாராட்டையும் இந்தப் பாடல் பெற்றுள்ளது. இதற்கிடையே, பிரதமரின் விருந்தில் பங்கேற்ற தனுஷ், நேற்று சென்னை திரும்பினார். இந்த ஆண்டு தனது புத்தாண்டு தினத்தை பெற்றோர் மற்றும் மாமனார் ரஜினியின் ஆசியுடன் தொடங்குவேன் என்று கூறிய அவர், இன்றைய தினம் தன் மனைவி ஐஸ்வர்யாவின் பிறந்த நாளையும் விமரிசையாக கொண்டாடப் போவதாக அறிவித்திருந்தார்…

Sunday, January 15, 2012

குட்டிகள் புரியும் சாகசத்திற்கு அளவே இல்லை...!

இன்றைய காலகட்டத்தில் குட்டிகள் புரியும் சாகசத்திற்கு அளவே இல்லை. இப்போதேல்லாம் குறைந்த வயதிலே அறிவின் தேடல், விவேகம் எனபன வளர்ச்சியடைந்து செல்லும் காலம்.

பெயர்வர்களுக்கு ஈடுசெய்யும் அளவுக்கு சில குழந்தைகளின் ஆற்றல் பிரமிக்க வைக்கும்.

அந்தவகையில் ஒரு குட்டி ஒன்று ஆடும் பிறேக் டான்ஸ்சை ( Break dance) பாருங்கள். எமக்கு ஆட தோன்றும்.உலகிலேயே இவர் மிகவும் குறைந்த வயதில் பிறேக் டான்ஸ் ஆடும் குட்டி குழந்தையாக இருப்பாரோ!!!

http://www.youtube.com/watch?v=Aus7I7MhaOM&feature=player_embedded

புதிதாக பேஸ்புக்!: பெரும் ஆபத்தும் காத்திருக்கின்றது-அதிர்ச்சி செய்தி (வீடியோ இணைப்பு)

பேஸ்புக் சமூகவலையமைப்பின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் பூராகவும் சுமார் 800 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களை இது கொண்டுள்ளது.

இச் சமூக வலையமைப்பின் செல்வாக்கினை வியாபார நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் நன்கு அறிந்து வைத்துள்ளன. எனவே தான் பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதில் தங்களுக்கென ஒரு பக்கத்தினைப் பேணுவதிலும் ஆர்வம் காட்டுகின்றன.

குறிப்பாக சில நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளிலும் பேஸ்புக் பாவனையை இணைக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளன.

கையடக்கத்தொலைபேசி மற்றும் டெப்லட் கணனிகளில் பேஸ்புக்கினை இலகுவாகப் பயன்படுத்தக்கூடியவாறு தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான மெர்சடிஸ் - பென்ஸ் தனது புதிய கார் மொடல்களில் பேஸ்புக்கினை இலகுவாக உபயோகிக்கும் வகையில் புதிய பேஸ்புக் அப்ளிகேஷன் ஒன்றினை உருவாக்கியுள்ளது.

இதற்கென அதி நவீன தொழில்நுட்பத்தில் 'mBrace2' என்ற அமைப்பொன்றும் மெர்சடிஸ் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2xeUuSlC1ok


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2xeUuSlC1ok


திரையுடன் கூடிய இவ்வமைப்பின் ஊடாக பேஸ்புக் மட்டுமன்றி கூகுள், யெல்ப் ஆகிய இணையத்தளங்களுடனும் தொடர்பு மேற்கொள்ள முடியும்.

கார்ப் பயணம் மேற்கொள்ளும்போது இவ் அப்ளிகேஷனின் ஊடாக டைப்செய்து ஸ்டேடஸ் அப்டேட்களை மேற்கொள்ளமுடியாது. எனினும் முன்னரே பதிவு செய்து வைத்திருந்த ஸ்டேடஸ்களை பேஸ்புக்கில் பதிந்துகொள்ளமுடியும்.

நாம் எங்கு பயணம் செய்யப் போகின்றோம் என்பதனை முன்னரே காரின் நெவிகேசன் சிஸ்டத்தில் பதிவு செய்து கொள்ளமுடியும். இதன் படி நமது பயணம் தொடர்பான தகவலையும் பேஸ்புக்கில் பதியமுடியும்.

மேலும் ஒவ்வொரு இடத்தினையும் நீங்கள் கடக்கும் போது அந்த இடத்தில் வசிக்கும் உங்களது பேஸ்புக் நண்பர்கள் தொடர்பாக அறியத்தருவதுடன், நாம் பேஸ்புக்கில் 'லைக்' செய்திருந்த வியாபார நிறுவனங்கள், விடுதிகள் தொடர்பாகவும் அறியத்தரும்.

இவை அனைத்தும் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தினைக் கொண்டே செயற்படுகின்றன.

மெர்சடிஸ் நிறுவனம் கிளவுட் தொழில்நுட்பத்தின் மூலம் மேற்படி அப்ளிகேஷன்களுக்கு அப்டேட்களையும் வழங்கவுள்ளது.

எந்தவொரு 3ஜி வலையமைப்பின் ஊடாகவும் பாவனையாளர்கள் இச் சேவையைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

கூடிய விரைவில் மற்றைய கார்தயாரிப்பு நிறுவனங்களும் இவ்வசதியை வழங்கத்தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் இதனால் விபத்துக்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரிக்குமென பல சமூக அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

பேஸ்புக் ஏற்கனவே நமது அன்றாட வாழ்வில் பல வழிகளில் ஆதிக்கம் செலுத்துவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது வாகனங்களிலும் பேஸ்புக் பாவனை வரத்தொடங்கினால் ஓட்டுநர்களின் கவனம் அதில் திரும்புமெனவும் இதனால் விபத்துகள் ஏற்படுவது நிச்சயம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையை கருத்தில் கொண்டு இத்திட்டத்தினை கைவிடுவது சிறந்ததென அவர்கள் தெரிவிக்கின்றனர்.

'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பது பேஸ்புக்குக்கும் பொருந்தாமலா போய்விடும்?

Tuesday, January 10, 2012

நமது கணணிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக RAM ஒன்றை பொறுத்துவதனால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. அதேவேளை பென்டிரைவ்களின் விலை குறைவானதே.
முதலில் Windows Xp யில் எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணணியின் performanceயை அதிகரிக்கலாம்.
முதலில் பென்டிரைவ் ஒன்றை(குறைந்தது 1GB) USB port வழியாக பொறுத்துங்கள்.
1. பின் My Computer ல் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
2. அதிலுள்ள Advanced பகுதியில் Performance இல் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள்.
3. அதன் பின் தோன்றும் வின்டோவில் Advanced பகுதியில் Change பொத்தானை Click செய்து பென்டிரைவ்வை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
4. பின் Custom Size என்பதை Click செய்து பயன்படுத்த வேண்டிய அளவை டைப் செய்யுங்கள். (Initial மற்றும் Max எனும் இரு பிரிவிலும் ஒரே அளவை வழங்குங்கள்).
5. பின்னர் Set செய்து உங்கள் கணணியை Restart செய்யுங்கள் அல்லது ReadyBoost அல்லது eboostr மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின் பென்டிரைவ்வை பொறுத்தி eboostr control pannel இல் பென்டிரைவ்வை add செய்து பயன்படுத்தலாம். (Restart செய்தல் கட்டாயமானதே)
6. Windows 7 யில் பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தலாம். உங்கள் கணணி 256GB RAM கொண்டிருந்தால் 8 ReadyBoost Devices களை ஒவ்வொன்றும் 32GB கொள்ளவை உடை பென்டிரைவ்களாக பயன்படுத்தலாம். எனவே Windows 7 இல் மொத்தமாக 256GB RAM வரைக்கும் பயன்படுத்தலாம்.
உங்கள் பென்டிரைவ்வில் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
அதில் ReadyBoost பகுதியில் Use This Device ஐ தெரிவு செய்யுங்கள்.
Space to reserve for system speed என்ற இடத்தில் கூட்டி விடவும்.
இப்போது Apply செய்து விடுங்கள், உங்கள் பென்டிரைவ்வின் Performance உயர்ந்துவிடும்

Monday, January 9, 2012

2012 உலகம் அழிய வேண்டுமா..???

பதிவுக்கு போறதுக்கு முண்ணாடி எல்லோருக்கும் ஒன்னு சொல்லியே ஆகனும், அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2011 முடிஞ்சு 2012 ஆரம்பிச்சாச்சு...சில பேருக்கு “ஜஸ்ட அனதர் டே” (Just another Day), அப்பிடின்கிற மனப்பான்மை இருக்கும். பல பேருக்கு “போனது எல்லாம் போகட்டும், இனி மேல புதுசா ஒரு இன்னிங்க்ஸ் தொடங்குவோம்” அப்பிடின்கிற மனப்பான்மை இருக்கும். எண்ணங்கள் எப்படியோ,  எல்லோருக்கும் இந்த ஆண்டு வெற்றிகரமாய் அமைய என்னுடைய வாழ்த்துக்கள். அப்புறம் வர போற 2012  ஹாலிவுட்காரன்க்கு ரொம்ப ஸ்பெஷலான மற்றும் பிடிச்ச ஆண்டு. ஏன்னா இந்த நம்பரை வச்சு ஏற்கனவே அவனுக நல்லா காசு பார்துட்டானுக.2009 ஆண்டு Roland Emmerich எடுத்த திரைகாவியம் தான் 2012. இங்க எப்படி பேரரசும், விஜய டி.ஆர் -ம் தமிழில் யார் என்ன மாதிரி உலக சினிமா எடுத்தாலும், தங்களோட ஸ்டைலில் கொஞ்சம் கூட காம்பிரமிஸ் பண்ணிக்காம அவங்களுக்கு பிடிச்ச !!! ஸ்டைல்ல படம் எடுத்து தள்ளுறாங்கலோ, அதே போல ஒரு ஹாலிவுட் டைரக்டர் தான் Roland Emmerich. இவரு எடுக்குற படம் எல்லாம் “அழிவு, பேரழிவு, ரொம்ப ரொம்ப பேரழிவு “அப்படிங்கிற முனு பிரிவுல போட்டுறலாம். இந்த படத்தை நான் மூனாவது பிரிவுல “ரொம்ப ரொம்ப பேரழிவு” சேர்கிறேன்.
ந்த படத்துல (2012) அவரு எடுத்த கான்செப்ட் வழக்கம் போல உலக அழிவு தான், அதுவும் கரெக்டா 2012 ஆம் ஆண்டு உலகம் அழிய போறதா 2009 ஆம் வருஷம் இந்த படத்தை எடுத்தார். கான்செப்ட் என்னனா மாயன் நாகரிகம் கணக்கு படி அவங்க காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி, கி.பி. 2012-ல் முடியுது. அதுவும் கரெக்டா 2012 டிசம்பர்-21 ஆம் தேதி முடியுது. சரி அவங்க காலண்டர் முடிஞ்சா புது காலண்டர் வாங்கி குடுக்க வேண்டியதுதானே, அத விட்டுட்டு “மாயன் காலண்டர்” முடிஞ்சா உலகமே அழிய போகுது அப்பிடின்னு கொலைவெறி பதியை கிளப்பி விட்டாங்க சில அறிவு ஜீவிகள். அதையே Roland கெட்டியா பிடிச்சுகிட்டு எடுத்த படம் தான் 2012. 
ஏற்கனவே இதே மாதிரி “1999” ஆம் ஆண்டு முடிஞ்சு 2000 வருஷம் ஆரம்பத்தில் உலகம் அழிய போறதா நாஸ்ட்ரடாமஸ் கணிச்சசாருன்னு ஒரு புரளி வந்திச்சு. நாஸ்ட்ரடாமஸ் பெரிய அப்பாடக்கர், அவரு கனிச்சா கரெக்டா இருக்கும், அப்பிடின்னு பெரிய பில்ட் அப் எல்லாம் குடுத்தாங்க. ஆனா 1999 முடிஞ்சு 13 வருஷம் ஆச்சு. அதுக்கு ஏத்த மாதிரி “Y2K” பிரச்சனை வேற சொன்னாங்க. ஆரம்பம் (உலகம்) அப்படின்னு ஒன்னு இருந்தா கண்டிப்பா முடிவுன்னு ஒன்னு இருக்கும். ஆனா ஆரம்பமே (உலகம்) எப்படி உருவானது அப்படின்னு நமக்கு சரியா தெரியாதப்ப முடிவை பத்தி யோசிக்கிறது முட்டாள்தனமானது. சரி உலக அழிவ விடுங்க, ரொம்ப சீரியஸ்ஸ போயிட்டோம். நம்ப அடுத்து க்வென்டின் 2014 –ல எடுக்க போற “Kill Bill –Vol-3” படத்துல யாரு யார பழி வாங்குவாங்க அப்படின்னு கவலை படுவோம். இல்லாட்டி நோலன் “The Dark Knight Rises”- க்கு அப்புறம் என்ன படம் எடுப்பாருன்னு யோசிப்போம். ஐயோ..  எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன்...... இப்போ 2012 படத்தை பத்தி பார்போம்.. 


கதை சுருக்கம்:

கதை 2009ல் துவங்குகிறது. பூகம்பம் மற்றும் சுனாமி மூலம் பூமிக்கு அழிவு நெருங்குவதை விஞ்ஞானிகள் அமெரிக்க அரசுக்கு அறிக்கையாகத் தருகிறார்கள். பூமியைக் காக்க உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்குகின்றன. பலனில்லை. 2012ல் உலகின் அழிவு துவங்குகிறது. இப்படி உலக அழியிர கதையில ஒரே ஒரு அமெரிக்க குடும்பம் மட்டும் தப்பிக்க நடத்தும் போராட்டம் தான் படமே. அந்த குடும்பம் அக்மார்க் அமெரிக்க குடும்பத்துக்கு உண்டான எல்லா தகுதிகளும் நிறைந்த ஒரு பல்கலைக்கழகம். எப்படினா அந்த குடும்ப தலைவி வேற ஒருத்தன் கூட வாழ்ந்து கொண்டிருப்பாள். அந்த குடும்பத்துல்ல ரெண்டு குழந்தைகள், ஒரு பையன், பொண்ணு. அந்த பையனுக்கும் அவனோட அப்பாவான ஹீரோவுக்கும் நல்ல ரீலேசன்ஷிப் இருக்காது. கடைசியில அந்த குடும்பம் உலக அழிவுல எப்படி தப்பிச்சு அப்பிடிங்கிரத Roland தன்னோட பணியில பதில் சொல்லி இருப்பார்.


பட துளிகள்:

படத்தோட கதை படு மொக்கையா இருந்தாலும், கிராபிக்ஸ் கலக்கலா இருக்கும். சுனாமி, பூகம்பம், எரிமலை எல்லாத்தையும் ஸ்க்ரீன்ல ஒரே நேரத்துல பார்க்க விஷுவல் ட்ரீட்.

அமெரிக்கன் ப்ரெசிடெண்ட் மக்களுக்காக !!! தன் உயிரை தியாகம் செய்யும் காட்சி நல்லா இருக்கும்.

டிஸ்கி:

நீங்க படத்தை பார்திருந்தா ஓகே. பாக்காட்டி சின்ன அட்வைஸ். ரொம்ப கடுப்பா இருந்தா இந்த படத்தை பார்க்காதேங்க, இன்னும் ரொம்ப கடுப்பு ஆகிருவேங்க. சும்மா ரிலாக்ஸ்ஸா இருக்கும் போது பாருங்க.. நல்ல BR Rip ப்ரின்ட்ல பாருங்க...

இந்த படத்துக்கு அப்புறம் Roland இனிமேல் அழிவு படமே எடுக்க மாட்டேன் அப்படின்னு சத்தியம் பண்ணி இருக்கிறார்.

Sunday, January 8, 2012

நண்பன் சென்சார் வோட் தகவல்


நண்பன் படம் 2011ம் ஆண்டு விருது வழங்கும் படங்களுக்குள் சேர்க்கப்பட்டுள்ளது. ஏனெனில் இப்படம் 2011ம் ஆண்டு சென்சார் நிறுவனத்தால் u செர்டிபிகாடே வழங்கப்பட்டுள்ளது அனைவரும் பார்க்க கூடிய படமாக வந்துள்ளது என சென்சார் நிறுவனமும் பாராட்டியுள்ளது.
இப்படம் பொங்கல் வெளியீடாக ஜெனவரி 12 வெளிவர உள்ளது.

முக புத்தகத்திற்கான குறுக்கு வழிகள்!

நீங்கள் விசைப் பலகையை பெரும்பாலும் பயன்படுத்துபவா் எனில், விசைப் பலகை குறுக்கு வழிகளை தெரிந்து வைத்திருத்தல் நல்லது. இந்தப் பதிவில் முகப் புத்தகத்தில் பயன்படுத்தக் கூடிய குறுக்கு வழிகள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நீங்கள் குரோம் இ.உலாவி பயன்படுத்துபவா் எனில்,
Alt உடன் கீழ்க்காணும் குறுக்கு வழிகளை பயன்படுத்தலாம். (விண்டோஸ் இயங்கு தளத்தில்)
1 – home
2 – timeline/profile
3 – friends
4 – messages
5 – notifications
6 – general account settings
7 – privacy settings 
8 – முகப் புத்தகத்தின் facebook page
9 – legal terms
0 – help center
m – new messages
? – search
நெருப்பு நரி இ.உலாவி எனில், Shift + Alt உடன் மேற்காணும் குறுக்கு வழிகளைப் பயன்படுத்துங்கள். (விண்டோஸ் இயங்கு தளத்தில்)
இன்ரநெட் எஸ்புளோரா் 9 எனில், சில குறுக்கு வழிகள் மாத்திரமே செயற்படுகின்றன.(Alt+#,Enter)
Mac இயங்கு தளம் எனில்,
  • குரோம் – Control+Option+#
  • நெருப்பு நரி  - Control + #
  • சபாரி - Control+#
பிறகென்ன விசைப் பலகை குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி அசத்துங்கள்.

அறியாத சில விசயங்கள் பகுதி-1

அறியாத சில விசயங்கள் பகுதி-1

O இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் மறந்துபோன விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவர நெற்றியில் விரல் வைத்து தட்டுகிறார்கள். இது முன்னோர்கள் வழியாக நமக்கும் வந்தது.

O வலது கைப்பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும்போது வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது வாயின் இடது புறத்தை உபயோகித்து உணவை ருசிப்பது வழக்கம்.

O வெங்காயம் உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வரும். காரணம் அதில் உள்ள அமிலத்தன்மை. வெங்காயத்தினை உரிக்கும்போது அதில் உள்ள அமிலம் வெளிப்பட்டு காற்றில் கரைந்து உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறது. வெங்காயம் உரிக்கும்போது சூயிங்கம் மென்றால் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவராது.

O உங்கள் நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்கள் நாக்கு பாக்டீரியா தொல்லையில்லாமல் சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். வெண்மை நிறத்தில் இருந்தால் பாக்டீரியா பாதிப்பு உள்ளது என்று பொருள்.

O வியப்பால் அவள் விழி விரிந்தது என்று கவிஞர்கள் கவிதை புனைவார்கள். விஞ்ஞான ரீதியில் இது உண்மை. அதாவது ஒரு மனிதன் மகிழ்ச்சியான ஒன்றை அல்லது ஆச்சர்யம் தரும் ஒன்றைப் பார்க்கும்போது அவனது கருவிழி 45 விழுக்காடு விரிவடைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

O கடலில் கிடைக்கும் சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதனை சிலர் கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது.

O கேரள மாநிலம் நீலாம்பூர் என்னும் காடுகளில் ஆதிவாசி மக்களின் சில பிரிவினரில் வினோதமான பழக்கம் நிலவுகிறது. இவர்கள் பிறக்கும் குழந்தை களுக்கு உடனடியாக பெயர் வைத்துவிடுவதில்லை. 15 வருடங்கள் ஆன பிறகே பெயர் சூட்டுகிறார்கள். அதுவரை தங்களது குழந்தைகளை மோளே (மகள்), மோனே (மகன்) என்று மலையாளத்தில் அழைக்கி றார்கள். 15 வயதாகும்போது அந்தக் குழந்தையின் தந்தையின் கனவில் கடவுள் தோன்றி `இந்தப் பெயரை உன் குழந்தைக்கு வை' என்று சொல்வாராம். அதன் பிறகே பெயர் சூட்டும் படலம் நடக்கும்.

O ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளை அறிவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்ததில் அவைகள் அனைத்தும் கசக்கும் சுபாவமுடைய வேப்பமரத்து இலை-குச்சிகளால் நேர்த்தியாக கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. மகத்தான மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையின் கசப்பான நெடிக்கு முட்டைகளையோ, குஞ்சுகளையோ வைரஸ் கிருமிகள் நெருங்குவது கிடையாது. ஆகவேதான் சிட்டுக்குருவிகள் வேப்பிலையால் கூடுகளை கட்டுகின்றன.

O நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடைய தவளைகள் தமது கண்களால் கேட்கவும் செய்கின்றன. தவளைகளின் கண்களே காதுகளாகவும் இயங்குகிறது. தவளைகளுக்கு அதனுடைய கண்களுக்குப் பின்புறம் மூளையிலிருந்து வரும் நுண்ணிய நரம்பு அமைந்துள்ளது. அதன் காதுகளின் பணியிணைச்செய்கிறது.

O கொடிய விஷத்தைக் கொண்ட தேள்கள் சேர்ந்தாற்போல் ஆறு மாதம் கூட உணவு உண்ணாமலே வாழக் கூடிய வல்லமை பெற்றது. விலங்கியல் ஆராய்ச்சியின் போது ஒரு தேள் 420 நாட்கள் எந்த வித ஆகாரமும் இல்லாமல் வாழ்ந்து சாதனை புரிந்தது.

0 கண்கவர் நீலகிரி மலைக் காடுகளில் ஒரு வகை பச்சோந்தி வாழ்கிறது. இதனுடைய உடல் நீளம் 5 செ.மீட்டர் தான். இதில் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், இதன் நாக்கின் நீளம் 1.25 மீட்டர். இதன் நாக்கு எப்போதும் சுருட்டிய நிலையிலேயே இருக்கும். இது ஒரு மரக்கிளையில் ஒய்யாரமாக உட்கார்ந்தபடியே தனது நீண்ட நாக்கினை நீட்டி மற்ற கிளைகளில் உள்ள புழு, பூச்சிகளை அதில் ஒட்ட வைத்து தின்றுவிடும்

O முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர். இவர், 1578-ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். எனினும் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் என்னும் நெதர்லாந்து நாட்டுக் காரர் 1620-ம் ஆண்டு முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர். நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்த அவர் அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது.


O ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776-ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். எனினும் சகல வசதிகளுடனும் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும் சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன.

O ஒரு மனிதன் தினமும் சராசரியாக ஒரு மணி நேரம் 6 நிமிடங்களை பயணத்தில் கழிக்கிறான். வருடத்திற்கு ஒவ்வொருவரும் சராசரியாக 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்கிறார்கள்.உலக அளவில் 53 சதவீதம் பேர் கார்களிலும், 26 சதவீதம் பேர் பஸ்சிலும், 9 சதவீதம் பேர் ரெயிலிலும் இன்னொரு 9 சதவீதம் பேர் விமானங்களிலும் பயணிக்கிறார்கள். சைக்கிள் பயணம் வெறும் 3 சதவீதம்தான். 2050-ம் ஆண்டு அதிகவேக வாகனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி விடும் என்பதால், அப்போது ஒரு நாளில் ஒருவர் பயணம் செய்யும் நேரம் 12 நிமிடங்களாகக் குறைந்து விடுமாம். அப்போது கார்களில் பயணம் செய்வோர் 35 சதவீதம் பேரும், பஸ்சில் 20 சதவீதம் பேரும் அதிகவேக வாகனங்களில் 41 சதவீதம் பேரும் ரெயிலில் 4 சதவீதம் பேரும் பயணம் செய்வார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள࠯?.

O உலகின் முதல் போக்குவரத்து சிக்னல் 1890-ம் ஆண்டு லண்டன் நகரில் பயன் படுத்தப் பட்டது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அப்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் லண்டனில் எதுவும் கிடையாது. குதிரைகள் இழுத்துச் செல்லும் பஸ்கள் மட்டுமே இயங்கின. அமெரிக்காவில் 1890ம் ஆண்டு இறுதி வாக்கில் தான் கார்கள் அறிமுகமாயின. முதல் தானியங்கி போக்குவரத்து சிக்னல் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் நகரில் 1920-ம் ஆண்டு பொருத்தப்பட்டது.

O வங்கி முறையிலான கடன் கொடுக்கும் பழக்கம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. பணக் கடன் வழங்கியது, கடனை அடைத்தது போன்றதற்கான ஆதார ரசீதுகள் 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகும். காகிதப் பணம் கடன் தருவது 17-ம் நூற்றாண்டில் வேகமாக பரவியது. தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் எந்திரங்களில் பணம் எடுப்பதற்கு அட்டை வழங்குவது நமது நாட்டில் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் வேகமாக வளர்ச்சி கண்டது. எனினும் அமெரிக்காவில் 1951-ம் ஆண்டிலேயே பணம் எடுக்கும் அட்டைகள் புழக்கத்திற்கு வந்து விட்டன. டைனர்ஸ் கிளப் தனது உணவக வாடிக்கையாளர்கள் 200 பேருக்கு நிïயார்க் நகரில் உள்ள தங்களின் 27 உணவகங்களில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் கிரடிட் கார்டுகளை வழங்கியது. காந்த பட்டைகளுடன் கூடிய கிரடிட் கார்டு 1970-ம் ஆண்டு புழக்கத்திற்கு வந்தது.

O வாலாட்டிக் குருவி எப்போதும் ஏன் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கிறது தெரியுமா?...

அது சுவாச உறுப்பாக பெற்றிருப்பது வாலைத்தான். எனவேதான் சுவாசிப்பதற்காக தனது வாலை இடைவிடாது ஆட்டிக் கொண்டே இருக்கிறது
தொடரும்...