Thursday, November 10, 2016

பான் ஒன்றின் விலை 10 மில்லியன் சிம்பாபே டொலர். (பணவீக்கம்) அனைவரும் படிக்க வேண்டிய பதிவு


சிம்பாபே நாட்டில் பான் ஒன்றின் விலை 10 மில்லியன் சிம்பாபே டொலருக்கு விற்கப்பட்டது..
பணவீக்கத்தின் உச்சகட்டத்தை அடைந்த நாடுகளில் சிம்பாபேயும் ஒன்று. பொதுவாக பணவீக்கம் 3%-15% இல் இருக்கும்.
சிறியளவிலான பணவீக்கம் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியை உண்டு பண்ணும்.
இலங்கைyயின் ப.வீ. 4.20%,
இந்தியா 5.17% .
2008 இல் சிம்பாபே பணவீக்கம் 79,600,000,000%.
ப.வீ. அதிகரிக்க பணத்தின் பெறுமதி குறையும். இந்நிலையிலே 2008,2009
ஆண்டுகளில் சிம்பாபேயின் அரச கடன் காரணமாக அரசுக்கு அதிகமாக பணம் தேவைப்பட்டது இதற்கு அதிகமான பணங்களை அச்சடிக்க தொடங்கியது. விளைவு என்னவென்றால் எல்லாரின் கையிலும் அதிகமான பணம் புழங்க ஆரம்பித்து விட்டது.
பொருட்களுக்கு தட்டுப்பாடு இதனால் விலை அதிகரித்து அதிகரித்து ஒரு கட்டத்தில் பாண் ஒன்றின் விலை 10 மில்லியன் சிம்பாபே டொலராக இருந்தது.
ஒரு பாண் வாங்க செல்ல இவ்ளோ பணத்தை டேக்டரிலா கொண்டு போவது என்று உங்களது மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது..
நமது அரசு 5000 தாள் அடித்தது போல் சிம்பாபே அரசும் 100,000 தாள், 10,00,000 தாளில் ஆரம்பித்து நூறு ட்ரில்லியன் பெறுமதியான தாள் வரை அடித்தது.

இறுதியில் தனது சிம்பாபே டொலரை பெறுமதி இழக்க செய்து,அது இனி செல்லாது என அறிவித்து அமெரிக்கா டொலருக்கு மாறியது..!!
சிறியளவிலான பணவீக்கம் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியை உண்டு பண்ணும்.
பெரிய அளவிலான பணவீக்கம் நாட்டை நாசமாக்கி விடும்.
ஜ .மபாஸ் தீன்