Wednesday, January 18, 2012

இலங்கை அணிக்குள் இரண்டு பிரிவுகளா...?

தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ள இலங்கை கிரிக்கட் அணி இரு கோஷ்டிகளாக பிரிந்து செயற்படுவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அணியின் மூன்று சிரேஷ்ட வீர்ர்களின் தலைமையில் சில வீரர்களும் அணித் தலைவர் தலைமையில் இன்னும் சில வீர்ர்களுமாகச் சேர்ந்து இரு அணிகளாக பிரிந்து செயற்படுகின்றனர் என்றும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
சிரேஷ்ட வீர்ர்களின் தலைமையிலான அணியே பலம் பொருந்திக் காணப்படுகிறது என்றும் அந்த்த் தகவல்கள் மேலும் கூறுகின்றன.
இதேவேளை, தென்னாபிரிக்க கிரிக்கட் போட்டிகள் முடிந்து ஒரு வாரகாலத்துக்குள் அனைத்து வீர்ர்களையும் நாடு திரும்புவற்கு ஏற்பாடு செய்யுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே கிரிக்கட் சபையின் தலைவர் உபாலி தர்மதாசவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment