Friday, January 13, 2017

மபாஸ் தீனின் பயணக்குறிப்பிலிருந்து... பாகம் 01

Deduru Oya
பேரூந்து ஓட்டுனர்களுக்கு தனது திறமையைகாட்ட ஏதாவது ஓர் இடத்தில் சந்தர்பம் கிடைத்துவிடும். புத்தளம் - சிலாபம் வீதி இதற்கு அதிக ஒத்துழைப்பும் கொடுக்கின்றது.

A9 வீதியின் சகோதரன் என்றுகூட இந்த வீதியை கூறிவிடலாம் ஏனெனில் அத்தனை உயிர்களை காவுகொண்டும் அமைதியாக இருக்கிறது.
வீதியின் இரு ஓரங்களிலும் பசுமையான மரங்களை கொண்டு பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக தெரிந்தாலும் வேகத்தை குறைக்கும் படி கூறும் பதாகைகளும் ஏற்கனவே விபத்துக்குள்ளான வாகனங்களின் எச்சமும் இது ஒரு உயிர்கவ்வும் கருவி என்பதை நிரூபித்து விடுகிறது..

50km தூரத்தை கொண்ட இவ்வீதியில் 50kmh வேகத்தில் செல்லுமாறு போக்குவரத்து அதிகார சபையால் பரிந்துரைக்கபாட்டாலும். 25 தொடக்கம் 35 நிமிடங்களில் கடந்து செல்கின்றனர். இதில் ஒரே இடத்திற்கு செல்லும் வேற வேற பஸ்களை சந்தித்து கொண்டால் அவ்வளவுதான் யார் முதலில் செல்வது என்ற போட்டி.

மீசைகள் எல்லாரும் பாரதியாக முடியாதல்லவா.. 120kmh வேகத்தில் திறமையான ஓட்டுனர்கள் தப்பித்து கொள்ள மீதி ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கிக்கொல்கின்றனர்.

அதிக மழை காலங்களில் தெதுறு ஓயா பெருக்கெடுத்து இவ்வீதி சுமார் 12km நீரில் மூழ்கிவிடும். ஏனைய வாகனங்கள் மட்டுப்படுத்தபட்டு பஸ் மற்றும் கனரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கபடும்.

பஸ்ஸில் நமது கால் நனையும் அளவு நீர் இருந்தாலும் வேற்றுபாதையில்லாமல் நிர்பந்திக்கப்படுகிறது. செல்லும் போது கடலில் செல்வது போன்ற அனுபவம் ஏற்பட்டாலும் பஸ் நிருத்தபட்டால் நாம் இறங்கி தள்ள முடியாத துர்பாக்கிய நிலை ஏற்படும் நாம் இறங்கினால் நீரின் வேகம் நம்மை இழுத்துக்கொண்டுசென்றுவிடும். நீரோட்டம் குறையமட்டும் அங்கேயே இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment